மருந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை

மேலும் 27மருந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மருந்து பொருட்களின் விலையை குறைக்கும் மூன்றாவது கட்டமாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம் (ஒசுசல) 42வது கிளை திறப்பு விழா நிகழ்விலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புற்றுநோயாளி ஒருவருக்குஅரசாங்கம் செலவிடும் வரையறை 1.5 மில்லியன் ரூபாவாக இருந்தது தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று45 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ சிகிச்சையை புற்றுநோயாளர் ஒருவர் பெற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Tue, 03/26/2019 - 14:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை