எரிபொருள் விலை உயருமா? குறையுமா?

இன்று நள்ளிரவு தெரியும் 

எரிபொருள் விலை தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் எரிபொருள் விலை நிர்ணயக் குழு இன்று மாலை கூடவுள்ளது.  

மாதாந்தம் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இக் குழு கூடவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.  

உலக சந்தையில் எரிபொருளின் விலை மாற்றங்களுக்கேற்ப இலங்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான விலைச் சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க இன்று நள்ளிரவு முதல் விலை உயருமா? அல்லது குறையுமா? என்பது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும். எவ்வாறாயினும் கடந்த பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து உலக சந்தையில் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் நிதியமைச்சின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.  

இறுதியாக கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி கூடிய எரிபொருள் விலை தொடர்பான குழு அன்றிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்திருந்தது.  (ஸ)

Mon, 03/11/2019 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை