சு.க. - மொட்டு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சிகளுக்கிடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தற்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ அலுவலகத்தில் இடமபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, அதன்முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சி சார்பில் அதன் தலைவர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 14ஆம். திகதி இரு கட்சிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

Thu, 03/21/2019 - 13:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை