இயந்திர வாள் பதிவுக்கான கால எல்லை நீடிப்பு

நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்வதற்கான கால எல்லை எதிர்வரும் 15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திர வாள்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், கடந்த 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது இதற்குரிய கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாகக் காடுகள் அழிக்கப்படுதல், மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவே இயந்திர வாள்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.

Fri, 03/01/2019 - 12:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை