துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் சந்தேக நபர் கஞ்சிபானை இம்ரானை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிரபல பாதாள உலகக் கோஷ்டித் தலைவரான மாகந்துர மதுக்ஷுடன் கடந்த பெப்ரவரி 04ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட கஞ்சிபானை இம்ரான் நேற்று முன்தினம் (28) நாடு கடத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்தபோது, விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.
Sat, 03/30/2019 - 15:46
from tkn