போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் ஒருவர் கைது

போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து விநியோகித்து வந்த குற்றச்சாட்டில் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இராஜகிரிய, மொரவிட்டியா வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கீகனகே ப்ரீத்தி சாந்த எனும் சந்தேக நபரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட 54சாரதி அனுமதிப்பத்திரங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் பொருட்டு, திட்டமிடப்பட்ட குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Wed, 03/20/2019 - 14:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை