நெதர்லாந்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி: பாதுகாப்பு அதிகரிப்பு

நெதர்லாந்தின் மத்திய நகரான உட்ரெச்சில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய கண்டூமூடித்தனமான தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்துள்ளனர்.

நகரின் பரபரப்பான பகுதியில் நேற்றுக்காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கு பொலிஸார் மற்றும் கனரக ஆயுதங்களுடன் படையினர் விரைந்தனர். டிராம் வண்டி ஒன்றுக்குள்ளேயே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

துப்பாக்கிதாரியை பிடிக்க பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருப்பதோடு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

துப்பாக்கிதாரி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப் படையினர் கட்டிடம் ஒன்றை சுற்றிவளைத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

தீவிரவாத அச்சுறுத்தல் நிலை அதிகரிக்கப்பட்டிருப்பதோடு பாடசாலை கதவுகளை மூடி வைக்கும்படி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விமான நிலையம் மற்றும் ஏனைய முக்கிய இடங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tue, 03/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை