இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானின் புலமைப்பரிசில் திட்டம்

பல்வேறு துறைகளில் பயின்றுவரும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் 1,000 பேருக்கு புலமைப்பரிசில் திட்டங்களை பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கவுள்ளதாக, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் கலாநிதி  ஷாஹித் அஹமட் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் 79 ஆவது தேசிய தின நிகழ்வு கொழும்பு, கலதாரி ஹோட்டலில் நேற்று (25) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்புலமைப்பரிசில்கள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் மூலமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tue, 03/26/2019 - 16:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை