கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டு கட்டடத் தொகுதி மக்களின் பாவனைக்கு நேற்று (17) வைபவரீதியாக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டுத்தொகுதிகள் கட்டடத்தினை இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை சிவலிங்கம் தர்சினி திறந்து வைத்தார். (கிளிநொச்சி குறூப் நிருபர்)
Mon, 03/18/2019 - 06:00
from tkn