அரச நிறுவன மோசடிகள்: இன்று முதல் விசாரணை

அரச நிறுவனங்களில் 2015மற்றும் 2018காலப்பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று (25) முதல் தொடர்ச்சியாக இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

மஹரகம அபேக்‌ஷா ஆஸ்பத்திரிக்கு மருந்து கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் இன்று முதலாவது விசாரணை நடைபெறுகிறது.  

இன்று காலை 9.00 மணிக்கு ஆஜராகுமாறு சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ரோஹன த சில்வாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர பொருளாதார அமைச்சினூடாக பசுமாடு கொள்வனவின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்தும் இவ்வாரம் விசாரணை நடைபெற இருப்பதாக அறிய வருகிறது.(பா)    

Mon, 03/25/2019 - 10:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை