மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு இங்கிலாந்து பெரும் பங்களிப்பு செய்கிறது

இங்கிலாந்து உயர்ஸ்தானிகர்

இங்கிலாந்து மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்குமிடையே நேற்று ஆரம்பமான மூன்றாவது 20 க்கு 20 போட்டியில் அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்ட இலங்கைக்கான இங்கிலாந்து உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரீஸ் இரு அணித்தலைவிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இப் போட்டி நேற்று பி.சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்றது. இங்கு கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர்: பெண்கள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் சிறந்து விளங்குகின்றது.அந்த வகையில் இரு அணித்தலைவிகளையும் நான் வாழ்த்து கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த போட்டியை பார்க்கும் போது ஆண்களை போன்று நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து காட்டியுள்ளனர் அதனால் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.பொருளாதார மற்றும் சமூக ரீதியாக சிறந்து விளங்க வேண்டும் என்றும்.அத்துடன் பெண்களின் பங்களிப்பு அதிகம் என்றும் அவர்களின் பங்கு விளையாட்டு மற்றும் விளையாட்டு ஊடக துறையில் சிறக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Fri, 03/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை