பாடசாலைச் சேவையை விஸ்தரிக்க ஏற்பாடு

பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி இந்த வருடத்தில் பாடசாலைச் சேவை பஸ்கள் 100சேவையில் ஈடுபடுத்தப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையிலேயே, பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

துற்போது பாடசாலை மாணவர்களுக்காக 1,400பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். முhணவர்களுக்கு சிறந்த சேவையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பாடசாலைச் சேவையை விஸ்தரிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாராச்சி தெரிவித்துள்ளார்.

Wed, 03/13/2019 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை