இலங்கைக்கு நோர்வே நிதியுதவி

இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக நிதியுதவி வழங்க நோர்வே அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்நிலையில், கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக 1,242 மில்லியன் ரூபாயை நோர்வே வழங்குமென நோர்வே வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் இராஜாங்கச் செயலாளர் மெரியான் ஹேகன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (05) சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில் இலங்கைக்கு நோர்வே தனது உதவியை வழங்குவதில் மகிழ்ச்சியடைவதாகவும்  அவர் கூறியுள்ளார். 

Wed, 03/06/2019 - 15:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை