வளர்ப்பு நாயுடன் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையோரத்தில்  இன்று (19) பிற்பகல் ஆணொருவரின் சடலமொன்று கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரையம்பதி -2 செல்வா நகரைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பூபாலப்பிள்ளை லோகேஸ்வரன் (49) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏத்துக்கால் கடற்கரையோரத்தில் கரையொதுங்கிய சடலத்தை அவதானித்த மீனவர்களும் பொதுமக்களும், இது தொடர்பாக பொலிஸாருக்கும் கிராம அலுவலருக்கும்  தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். 

இன்று முற்பகல் இவர் தனது வளர்ப்பு நாயுடன் முச்சக்கரவண்டியில் வந்து, கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது திடீரெனக் காணாமல் போயிருந்ததாகவும், இதனைத் தொடர்ந்து இவரது சடலம் கடற்கரையில் கரையொதுங்கியதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன், மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல். ஜவ்பர்கான்)

Tue, 03/19/2019 - 14:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை