கே.டி லால்காந்த பிணையில் விடுவிப்பு

மதுபோதையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

மார்ச் 01 பிற்பகல் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் செலுத்திச் சென்ற வாகனம், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றதாகவும் அதில் இரு பெண்கள் காயமடைந்ததாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Thu, 03/07/2019 - 15:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை