'கிம்புல எல குணா' என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் மிக நெருங்கிய உதவியாளரான ‘பெராமுல்ல சமீர’ உள்ளிட்ட போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (27) இரவு வத்தளை, ஹெந்தல, பல்லியவத்தை பிரதேசத்தில் வைத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கொட்டாஞ்சேனை, மட்டக்குளி மற்றும் வத்தளை பிரதேசங்களைச் சேரந்த 39, 30, 28, 27 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
1. கொட்டாஞ்சேனை, பரமானந்த விகாரை வீதியைச் சேர்ந்த, ‘பெராமுல்ல சமீர’ (30) என அழைக்கப்படும், வர்ணகுலசூரிய மதுரங்க பெனாண்டோ
குறித்த சந்தேகநபர் 106 கிராம் ஹெரோயின் உடன், டொல்பின் வகை வேன் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஜனவரி 13ஆம் திகதி வத்தளை, ஹேகிந்த பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு இருவரை கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஆவார்.
2. வத்தளை, எவரியவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த, எதின்தாஸ் சங்கரன் (39)
3. கொட்டாஞ்சேனை, பரமானந்த விகாரை வீதியைச் சேர்ந்த, வர்ணகுலசூரிய திலிண மதுசான் (28)
4. மட்டக்குளி, கல்யாண கங்காரம மாவத்தையைச் சேர்ந்த விவேக் எசலர் பெனாண்டோ (27)
இவர் கடந்த ஜனவரி 13ஆம் திகதி வத்தளை, ஹேகிந்த பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு இருவரை கொலை செய்த சம்பவம் மற்றும் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் உதவி ஒத்தாசை புரிந்த மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான சந்தேகநபர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கும் உத்தரவை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, திட்டமிட்டு குற்றப்பிரிவு மேற்கொண்டுள்ளது.
from tkn