பங்களாதேஷ் அணி வீரர்கள் நாடு திரும்பினர்

நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பங்களாதேஷ் அணி வீரர்கள் நாடு திரும்பினர்.

நியூசிலாந்து சென்ற பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் இரு டெஸ்டில் தோற்று 0–2 என தொடரை இழந்தது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவிருந்தது.

மைதானத்துக்கு அருகில் இருந்த இரண்டு பள்ளிவாசல்களில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் 50 பேர் கொல்லப்பட்டனர். அப்போது தொழுகைக்கு சென்ற பங்களாதேஷ் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் மூன்றாவது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹோட்டலில் இருந்து கிரைஸ்ட்சர்ச் விமான நிலையத்துக்கு பலத்த பாதுகாப்புடன் வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பின் அங்கிருந்து பங்களாதேஷை அடைந்தனர்.

Mon, 03/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை