புதையல் தோண்டியோர் கைது

சம்பூர், பொலிஸ் பிரிவிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைதுசெய்யப் பட்டனர்.

இவர்களை இம்மாதம் (19) வரை விளக்கமறியலில்  வைக்க மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம். சம்சுதீன் உத்தரவிட்டார். சந்தேக நபர்கள் சம்பூர் பொலிஸாரினால் நேற்று (5) மூதூர்   நீதிமன்றத்தில்    ஆஜர்படுத்தப்பட்டனர். பொலிஸாருக்கு  கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த நபர்களில் ஒருவரது காணியை   சுற்றி வளைத்து பொலிஸார் தேடுதல் நடத்தினர்.

(கிண்ணியா மத்திய நிருபர்)

Wed, 03/06/2019 - 08:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை