*ஏமாற்றப்படும் மக்களுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவே பலம்
*நியாயத்திற்காக ஜனநாயக போராட்டம் நடாத்த நேரிடும்
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் அனுசரணை வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று பாராளுமன்றத்தில் கேட்டுக்ெகாண்டார்.
தொடர்ந்தும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவே ஒரே பலமென சுட்டிக்காட்டிய அவர் இதனை ஜனாதிபதி நிராகரித்தால் தமிழ்பேசும் கட்சிகள் மலையகம் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து பாராளுமன்றத்துக்குஉள்ளும் வெளியிலும் நியாயம் கோரி ஜனநாயகப் போராட்டம் நடத்துவோமென்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை மன்னாரிலிருந்து மீட்கப்பட்டுள்ள மனித எழும்பு கூடுகள் பற்றிய அறிக்கை பெரும் ஏமாற்றம் அளித்திருப்பதென்பதால் அதனை மீண்டும் சர்வதேச நிபுணர்களைக் கொண்டு மீள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கில் இதுவரை இடம்பெற்றுள்ள உயிர் இழப்புக்கள் ,அழிக்கப்பட்ட சொத்து விவரங்களை உள்நாட்டு மற்றும் வெ ளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் மதிப்பிடும் பணியை அரசாங்கம் துரிதப்படுத்த வெண்டுமென்றும் அவர்கேட்டுக்ெகாண்டார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை 2019 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் 02 ஆம் வாசிப்பு மீதான 05 ஆம் நாள் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மாவை எம்.பி மேலும் கூறியதாவது-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு , கிழக்கு பிரதேசங்களில் யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் ஆகியும் எவ்வித பொருளாதார முன்னேற்றமும் முன்னெடுக்கப்படவில்லை.2018 ஆம் ஆண்டில் குறிப்பிட்டளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று 2019 ஆம் ஆண்டிலும் குறிப்பிட்டளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அப்பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்ப இந்த நிதி போதுமானவையல்ல.
எனவே அப்பிரதேசங்களில் யாராக இருந்தாலும் போரினால் உயிரிழந்தவர்கள் மற்றும் இழக்கப்பட்ட, அழிக்கப்பட்ட சொத்து விவரங்களை மதிப்பீடு செய்து அதற்கேற்ற வகையில் அதனை மீளக் கட்டியெழுப்ப முறையான திட்டங்களை வகுத்து நிதியை ஒதுக்கித் தருமாறு நாம் ஏற்கனவே அரசாங்கத் தரப்பினரை வலியுறுத்தியுள்ளோம். அதையே தான் இப்போது கூறுகின்றோம்.
லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்
from tkn