சட்டவிரோத நன்னீர் மீன்பிடியை தடுக்க விசேட படைப்பிரிவு

நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளின்போது மேற்கொள்ளப்படும் சட்டவிரோத முறைகளைத் தடுப்பதற்காக விசேட படைப் பிரிவொன்றை ஏற்படுத்துவதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துலிப் வெத ஆரச்சி தீர்மானித்துள்ளார்.  

அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தேசிய நீர் வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகத்திற்கு இராஜாங்க அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.   நாட்டில் பாரிய நீர்த்தேக்கங்கள், நடுத்தர நீர்த்தேக்கங்கள் என்று 12,000உள்ளன.அவற்றில் 40,000பேர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.  

இவற்றில் வருடா வருடம் இலட்சக்கணக்கான மீன் குஞ்சுகள் NAQDA இனால் இடப்படுகின்றன.கடந்த ஆண்டு 1100இலட்சம் மீன் குஞ்சுகள் இடப்பட்டுள்ளன. 2018தரவுகளின் படி அவற்றிலிருந்து 86,000இலட்சம் மெற்ரிக் டொன் அளவு மீன்கள் பிடிக்கப்பட்டன.  

ஆனால் அண்மையில் சட்டவிரோத முறைமைகள் காரணமாக இது பாதிப்படைந்துள்ளது. இதனால் மீனவர் அல்லாதவர்கள், மீனவர்களை விட சட்டவிரோதமான முறையில் அதிக மீன்களைப் பிடிப்பதால் மீன்பிடிக் கைத்தொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  

நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலின் போது இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்குப் பிரதேச மீன்பிடிப் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதால் இது போன்ற விடயங்களுக்காக விசேட படையொன்று அவசியம் என்பதால் இத் தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

பிரதேச மட்டங்களில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்ற முறைப்பாட்டுக்கு அமைய NAQDA தலைமையகத்தில் அதனை அமைக்க இராஜாங்க அமைச்சரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.    

Thu, 03/21/2019 - 09:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை