கஞ்சிப்பானை இம்ரான் சி.ஐ.டி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதுஷ் என்பவருடன் துபாயில் ஆட்ம்பர ஹோட்டல் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்ட, கஞ்சிப்பானை இம்ரான் என்றழைக்கப்படும் மொஹமட் நாஜிம் மொஹமட் இம்ரான் குற்றப் புலணாய்வு பிரிவினரின் கட்டுப்பாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

அவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை இன்றுகாலை வந்தடைந்தபோது கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.

Thu, 03/28/2019 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை