அதிவேக பந்துவீச்சாளராக காரைதீவை சேர்ந்த அஜித்குமார் தெரிவு

கிழக்கு மாகாண'AIRTEL FASTEST' அதி வேக பந்துவீச்சாளருக்கான தெரிவில் காரைதீவைச் சேர்ந்த சிவகுமார் அஜித்குமார் தெரிவாகியுள்ளார்.

இவருடைய வேகப்பந்துவீச்சின் வேகம் 118 ஆகும்.

சர்வதேச தரம்வாய்ந்த ஆடுகளத்தில் வேகப் பந்து வீச்சு நிர்ணயிக்கும் நிபுணர்களின் முன்னிலையில் இத்தெரிவு இடம்பெற்றது. அதில் இவர் திறமைகளை வெளிப்படுத்தி தெரிவாகியுள்ளதோடு தேசிய ரீதியில் கொழும்பில் இடம்பெறவுள்ள தெரிவுப் போட்டிக்குச் செல்லவுள்ளார்.

கடந்த 3-மார்ச் காலை 8மணி முதல் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா மைதானத்தில் நடைபெற்ற 'AIRTEL FASTEST' அதி வேக பந்துவீச்சாளருக்கான தெரிவில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்துகொண்டனர்.

பலத்தபோட்டி நிலவியது. அதில் காரைதீவு வீரன் சி.அஜித்குமார் தெரிவாகியுள்ளார்.

அஜித்குமார் காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரி உயர்தர பிரிவில் கல்வி கற்கும் மாணவராவார். சிறந்த கிரிக்ெகட் வீரரான இவர் காரைதீவு விளையாட்டு கழக வீரருமாவார்.

காரைதீவு குறூப் நிருபர்

Tue, 03/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை