சேறுவில தொகுதி அபிவிருத்திக்கு ரூ. நூறு மில்லியன் நிதி ஒதுக்க திட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் சேறுவில தொகுதி அபிவிருத்தி பணிகளுக்காக நூறு மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.

மொறவெவ பிரதேச சபைத்தலைவருக்கும் உறுப்பினர்களுக்குமிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று இன்று (14) மொறவெவ பிரதேச சபையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போதே பிரதியமைச்சர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் மொறவெவ பிரதேசத்தில் செமட்ட செவண திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்களுக்கு புதிய மாதிரிக்கிராமங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சேறுவில தொகுதி அபிவிருத்திக்கு 23மில்லியன் ரூபாய் நிதியினை கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக ஒதுக்கியுள்ளதாகவும் எதிர்காலத்தில் மிகுதி 78மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது மொறவெவ பிரதேச செயலாளர் பாத்திய விஜயந்த மொறவெவ பிரதேச சபைத்தலைவர் பௌத்த மதகுரு பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி.மற்றும் சபை செயலாளர் ஜூட் ராஜசிங்கம் மொறவெவ பிரசே சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.பைசர் .எப்.எம்.அஸ்மிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)

Thu, 03/14/2019 - 14:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை