காசா எல்லையில் இடம்பெறும் கலகத்தில் இஸ்ரேலிய எல்லை வேலி மீது வெடிக்கும் பொருட்களை பலஸ்தீனர்கள் வீசி எறிந்ததாகக் கூறி காசாவின் ஹமாஸ் நிலையில் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளன.
இஸ்ரேல் எல்லை வேலி பகுதியில் முன்னதாக இடம்பெற்ற மோதல்களில் காயமடைந்த பலஸ்தீனர் ஒருவர் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று குறிப்பிட்டது.
இஸ்ரேல் எல்லையை ஒட்டி மாலை இடம்பெற்ற கலகத்தின்போது பல வெடிக்கும் பொருட்கள் வீசி எறியப்பட்டதை அடுத்து தெற்கு காசாவில் இரு ஹஸாஸ் கண்காணிப்பு நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இஸ்ரேல் இராணுவத்துடனான மோதலின்போது காயத்திற்கு உள்ளான 24 வயது ஹபீப் அல் மஸ்ரி உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
from tkn