பேசாலையில் ஒருதொகை பீடி இலைகள் மீட்பு

மன்னார், பேசாலைப் பகுதியில் ஒருதொகை பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பேசாலை கடற்பகுதியில் நேற்றும் (08) நேற்றுமுன்தினமும் (07) வடமத்திய  கடற்படை முகாமைச் சேர்ந்த படைவீரர்கள்  சோதனை நடத்தினர். இதன்போது, பொதி செய்யப்பட்டு மறைத்து  வைக்கப்பட்டிருந்த பீடி இலைகளைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று (08) 1053.75 கிலோகிராம் பீடி இலைகளையும் நேற்றுமுன்தினம் (07) 325.4 கிலோகிராம் பீடி இலைகளையும் கைப்பற்றியதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்பீடி இலைகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுவதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

Sat, 03/09/2019 - 14:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை