பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் கைது

Rizwan Segu Mohideen
பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் கைது-Perpetual Treasuries Chairman Geoffrey Aloysius Arrested By CID

பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் ஜெப்ரி அலோசியஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் தந்தையான இவர், மத்திய வங்கியில் இடம்பெற்ற முறி மோசடி தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய, குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில், மத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன பணிப்பாளர்களான, புஷ்பமித்ர குணவர்தன, ரஞ்சன் ஹுலுகல்ல, முத்துராஜ சுரேந்திரன் ஆகியோர் இன்று (25) காலை CID யினால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 03/25/2019 - 12:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை