வணக்கஸ்தலங்களுக்கு விசேட வசதிகள்

நாட்டில் நேர்மையான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் குறைந்த வளமுடைய வணக்கஸ்தலங்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் திட்டம் நாடு பூராவும் செயல்படுத்தப்படவுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.

புத்தளம் மாவட்டத்தில், தலவில சாந்த அனா தேவாலயத்தில் நேற்று (13) தங்குமிட வசதி கொண்ட தர்மசத்திர ஓய்வுக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இந்த தர்மசத்திர ஓய்வு மத்திய நிலைய நிர்மாணிப்பணிகளுக்கென, 500 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Thu, 03/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை