அக்கரைப்பற்று கிங்ஸ்போ கழக வீரர்கள் கௌரவிப்பு

அக்கரைப்பற்று கிங்ஸ்போ விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் திறமைகாட்டிய வீரர்கள் கௌரவிப்பு நிகழ்வு கழகத்தலைவர் எம்.எம்.சஜீர் தலைமையில் அக்கரைப்பற்று கடற்கரை சலீம் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.எல்.தவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும்,நகர அபிவிருத்தி நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரின் ஒருங்கிணைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இக்கழகத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புகளுடன் செயற்பட்டுவரும் வீரா்கள் இதன்போது வருகை தந்த அதிதிகளினால் பதக்கம் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

கழகத்தின் செயற்பாடுகளுக்காக அமைச்சர் றவூப் ஹக்கீமின் சொந்த நிதி ஒரு இலட்சம் ரூபாவை கழகத்தலைவரிடம் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர், பிரதேச சபைன் உறுப்பினர் தமீம் ஆப்தீன்,கிங்ஸ்போ விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகர் என்.ரீ.முகம்மட் அஸ்மத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Tue, 03/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை