பருத்தித்துறையில் 91.591 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

பருத்தித்துறையில் உள்ள திக்கம் கரையோர பகுதியில் ரோந்து சென்ற கடற்படையினர் சிலர் 91.591 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவரை கைது செய்தனர். நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திக்கம் பகுதியில் வசிக்கும் 47 மற்றும் 60 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2019ஆம் ஆண்டு இதுவரை தொடர்ந்து இடம்பெற்ற செயற்பாடுகளில் இதுவரை 770 கிலோ கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

Mon, 03/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை