912 கிலோகிராம் பீடி இலைகளுடன் இருவர் கைது

தலைமன்னாரில் 912 கிலோகிராம் பீடி இலைகளுடன், இருவர் பொலிஸாரினால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

தலைமன்னார் வெளிச்ச வீட்டிற்கு, 5 கடல் மைல் தொலைவிலேயே இப்பீடி இலைகள் இன்று (21) கைப்பற்றப்பட்டுள்ளன.

27 மூடைகளில் பொதி செய்யப்பட்ட பீடி இலைகள்,  கண்ணாடியிலைப் படகொன்றில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

பேசாலையைச் சேர்ந்த இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளையும் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்தினரிடம்  ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

(றொசேரியன் லம்பேர்ட் -மன்னார் குறூப் நிருபர்)

Thu, 03/21/2019 - 15:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை