போதைப் பொருள் கடத்திய 9 வெளிநாட்டவர்கள் கைது

தெற்கு கடலோர கடற்பகுதியில் இலங்கை கடற்படை, விசேட அதிரடிப் படை (STF) மற்றும் பொலிஸ் நார்கோடிக்ஸ் பீரோ (PNB) ஆகியன மேற்கொண்ட கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஒன்பது வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 9 ஈரான் நாட்டவர்கள் இன்று காலை இலங்கையின் தென் கடற் பிரதேசத்தில் வைத்து, 100 கிலோ கிராமுக்கு அதிகமானப் போதைப் பொருட்களுடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட ​பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லத்தீப் தெரிவித்துள்ளார்.

குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்ட போது கப்பலிலிருந்து 50 கிலோகிராமுக்கும் அதிகமாக  போதைப் பொருள்  கடலுக்குள் கொட்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன், இந்தப் போதைப் பொருள் ஆப்கானிஸ்தானிலிருந்தே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதென்றும், சிரேஷ்ட ​பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லத்தீப் தெரிவித்துள்ளார்.

Sun, 03/24/2019 - 16:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை