ரூ. 5 பில்லியன் மதிப்புள்ள வைரத்துடன் சந்தேகநபர் கைது

பாணந்துரை, கெசல்வத்த பிரதேசத்தில் ரூ. 5 பில்லியன் மதிப்புள்ள வைரத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வைரக் கல் பன்னிபிட்டியவில் இரத்தின வியாபாரியிடம் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படுகிறது.

'கெலும' என்று அறியப்படும் இந்திக சம்பத் என்பவரே இவ்வாறு சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். எல்பிடிய, பிடிகலயைச் சேர்ந்த இவரை பேலியகொடையில் உள்ள குற்றத் தடுப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பொலிஸாரின் தேடுதலில் சந்தேக நபரின் எல்பிடிகல வீட்டிலிருந்து 15 மில்லியன் ரூபா பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வைர கல் மற்றும் 7 பில்லியன் ரூபா மதிப்புள்ள பல மாணிக்க கற்கள் கடந்த ஆண்டு நவம்பர் 5 ம் திகதி பன்னிப்பிட்டிய இரத்தின வியாபாரியிடம் இருந்து திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tue, 03/05/2019 - 13:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை