குவைத்திலிருந்து 52 பேர் நாடு திரும்பினர்

குவைத் நாட்டில் பணிப்பெண்களாக பணி புரிந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இலங்கையர்கள் 52 பேர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.  

நேற்றுக்காலை 6.35மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்த  இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 230ஆம் இலக்க விமானத்தில் இவர்கள் நாடு திரும்பினர்.  

இவர்களில் ஆறு பேர் குவைத் நாட்டில் இரு வருடங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளனர்.

ஏனையோர் ஒரு வருடத்திற்கு குறைவான காலமே அங்கு பணிபுரிந்துள்ளனர். இவர்கள் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள்.

குவைத் நாட்டில் இவர்கள் பணிபுரிந்த காலத்தில் சம்பளம் கிடைக்காது பல்வேறு விதத்திலும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்ததால் தாம் பணிபுரிந்த வீடுகளிலிருந்து தப்பி குவைத் நாட்டிலுள்ள இலங்கை வெளியேறி தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்தவர்களாவர்.  

இவர்களில் எட்டு பேரைத் தவிர ஏனைய 44 பேரும் குவைத் அரசாங்கம் வழங்கிய தற்காலிக விமான கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.(ஸ)

Fri, 03/01/2019 - 13:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை