அக்பர் இல்லம் 445 புள்ளிகளைப் பெற்று சம்பியன்

அனுராதபுரம் சாஹிரா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதிகளாக மகளிர் , சிறுவர் அலுவல்கள் , உலர் வலய அபிவிருத்தி அமைச்சர் சந்ராணி பண்டாரவும் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானும் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரி அதிபர் எம். ஜஹபார் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக வடமத்திய மாகாண அபிவிருத்தி பிரதி பணிப்பாளர் எம்.எச்.ஏ.எஸ்.அப்துஸ் சமது, அனுராதபுரம் மாநகர சபை உறுப்பினர் அல்பாரிஸ், வடமத்திய மாகாண முன்னாள் தமிழ் பிரிவு பணிப்பாளர் ஈ .பீர் மொஹமட் உட்பட பல கல்விசார் அதிகாரிளும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வில் அக்பர் இல்லம் 445 புள்ளிகளைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து கொண்டதுடன் கிண்ணத்தை அமைச்சர் சந்ராணி பண்டார இல்ல தலைவர்களிடம் வழங்கிவைத்தார்.

427 புள்ளிகளைப்பெற்று இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட ஜாயா இல்லத்திற்கான கிண்ணத்தை பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் வழங்கிவைத்தார். 359 புள்ளிகளை பெற்று சித்திலெப்பை இல்லாம் மூன்றாமிடத்தினை பெற்றுக்கொண்டது.

அநுராதபுரம் மேற்கு தினகரன், அநுராதபுரம் தினகரன், திறப்பனை தினகரன் நிருபர்கள்

Fri, 03/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை