கடுகண்ணாவை - அம்பலம பிரதேசத்தில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு, 38பேர் காயம்

அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியில் இருந்து புறப்பட்ட 4 பஸ்களில் ஒன்று மாவணல்லை கடுகண்ணாவை - அம்பலம பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்றிரவு 10மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா சென்ற 4பஸ்களில் ஒன்று வீதியை விட்டு சரிந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ் வண்டியில் ஆசிரியர் பயிற்சி கலாசாலையை சேர்ந்த பயிற்சி ஆசிரியர்கள் குழாம் பயணித்ததாகவும் விபத்துக்குள்ளாகிய ஆசிரியர்கள் மாவணல்லை மற்றும் பேராதெனிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

குறித்த விபத்தில் விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பெண்கள் (ஆசிரியைகள்) உட்பட சுமார் 38பேர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிழந்தவர் பஸ்வண்டியின் நடத்துநர் என்று தெரிய வருகின்றது.

விபத்து குறித்த விசாரணையை மாவணல்லை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Wed, 03/06/2019 - 08:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை