சிம்பாப்வேயில் சூறாவளி: குறைந்தது 31 பேர் பலி

சிம்பாப்வேயின் கிழக்குப் பகுதியில் வீசிய இடாய் சூறாவளியில் குறைந்தது 31 பேர் உயிரிழந்து மேலும் 71 பேரைக் காணவில்லை.

அந்த நாட் டின் சிம்னாமணி நகரத்தில் உள்ளவர்களே அதில் அதிகம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூறாவளி காரணமாக பாடசாலை ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் அதில் இரண்டு மாணவர்கள் பலியானதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன. மேலும், 50 பேர் அந்தக் கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோசமான வானிலை காரணமாக சில பகுதிகளில் மீட்புப் பணிகள் தாமதமடைந்து வருவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். சூறாவளியால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததை அடுத்து, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சூறாவளிக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்கனவே சுமார் 70 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 03/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை