3கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு பதுளையில் பறிமுதல்; சந்தேக நபரும் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

பதுளை, ஹாலிஎல, உடுவர பிரதேசத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில் வைத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது 40வயதான நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபரின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இந்த வலம்புரி லயன் அறை ஒன்றிலுள்ள அரிசி பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.   சந்தேகம் ஏற்படாதவாறு நபர் ஒருவரை அனுப்பி இந்த வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

(ஹற்றன் சுழற்சி நிருபர்) 

Mon, 03/04/2019 - 08:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை