மார்ச் 28 இல் க.பொ.த சாதாரண பெறுபேறு வௌியாகும்

கடந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு நாளை மறுதினம் (28) வெளியாகுமென, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
 
கடந்த டிசெம்பர் 3ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில், 656,641 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர். இவர்களில் 422,850 பாடசாலை மாணவர்களும் 233,791 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியுள்ளனர். இப்பரீட்சார்த்திகளுக்காக 4,661 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
 
Tue, 03/26/2019 - 14:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை