வில்பத்து விவகாரம்: ஜுன் 28 இல் விசாரணை

வில்பத்து, விலத்திக்குளம் காட்டுப்பகுதியில்  அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் எதிரான வழக்கை எதிர்வரும் ஜுன்   28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு  நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வன பரிபாலன சபை ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு எதிரான குறித்த வழக்கு இன்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர இதனை அறிவித்தார்.

Fri, 03/22/2019 - 15:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை