நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் மார்ச் 26 வரை நீடிப்பு

Rizwan Segu Mohideen
நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் மார்ச் 26 வரை நீடிப்பு-TID's Ex DIG Nalaka De Silva Re Remanded Till Mar 26

தீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று (19) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் 25 ஆம் திகதி முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 03/19/2019 - 12:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை