நாளை (30) சனிக்கிழமை முற்பகல் 9.00 மணி முதல் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்படும் மின்சார தடை மற்றும் அவசர திருத்த பணி காரணங்களால் நாளை மறுதினம் (31) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணி வரை இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய தெஹிவளை - கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவல மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்ப்பட்ட பகுதிகள் மற்றும் இரத்மலானை, சொய்சாபுர வீட்டுத்திட்டங்கள் ஆகிய பகுதிகளில் குறித்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
from tkn