ஆப்கானில் தற்கொலை தாக்குதல்: 16 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானின் கட்டுமான நிறுவனம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற தாற்கொலை தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரும் முன் இரண்டு வெடிப்புச் சத்தங்களுடன் நேற்று காலை ஒரு மணி நேரம் தாக்கதல் நீடித்ததாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் குறித்த நிறுவனத்தின் 16 பேர் கொல்லப்பட்டு மேலும் ஒன்பது பேர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது ஐந்து தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

தாக்குதல் நிறைவடைந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழலை குறைக்கும் வகையில் பொலிஸார் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எந்த குழுவும் இந்த தாக்குதலுக்கு பொறுப்புக் கூறவில்லை என்றபோதும் சம்பவம் இடம்பெற்ற நன்கர்ஹார் மாகாணத்தில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு மற்றும் தலிபான் தீவிரமாக இயங்கி வருகின்றன.

Thu, 03/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை