சுவாமி விபுலாநந்தரின் 127ஆவது ஜனன தினம்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 127ஆவது ஜனன தினம் இன்று (27) புதன்கிழமை தமிழ்கூறும் நல்லுலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

அவர் பிறந்த காரைதீவு மண்ணில் இன்று சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றம் ஏற்பாடு செய்துள்ள 127ஆவது ஜனன தினவிழா மணிமண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.

அங்குள்ள சுவாமி விபுலாநந்த அடிகளாரது திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து வேத பாராயணம் ஓதப்படவிருக்கிறது. அடிகளாரின் வெள்ளைநிற மல்லிகையோ.. என்ற பாடல் இசைக்கப்பட்டதும் பிரதான சொற்பொழிவு இடம்பெறவுள்ளது. இதேபோன்று நாட்டின் பலபாகங்களிலும் குறிப்பாக அவருடைய நாமத்தில் இயங்கும் நிறுவனங்களில் பாடசாலைகளில் இந்த ஜனன தின விழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

காரைதீவு குறூப் நிருபர்

Wed, 03/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை