கடலில் மிதந்த 1232.5 கிலோ பீடி இலைகள் மீட்பு

புத்தளம், உடப்புப் பிரதேசத்தில் 1232.5 கிலோகிராம் பீடி இலைகளை, கடற்டையினர் கைப்பற்றியுள்ளனர்.

இன்று (26) கைப்பற்றப்பட்ட இப்பீடி இலைகள் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்டதோடு, அவை 35 பைக்கெட்டுக்களாக பொதி செய்யப்பட்டிருந்ததாகவும் கடற்டையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட பீடி இலைகளை சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்டைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.​

மேலும், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 7,000 கிலோகிராமுக்கும் அதிகளவான பீடி இ​லைகளை கடற்டையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 03/26/2019 - 10:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை