இந்தோனேசியாவில் வெள்ளம்: உயிரிழப்பு 104 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் பப்புவா மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை 6,000 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அந்தப் பேரிடரால் 350 வீடுகள் அழிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் கடுமையாகச் சேதமடைந்தன. மலைப்பகுதிகளில் ஏற்பட்ட சேதத்தால், வீதிகளைக் கடந்துசெல்ல முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாலங்களும் உடைந்துள்ளன. அதனால், மீட்புக் குழு அந்த இடங்களுக்கு செல்லப் போராடி வருகிறது.

கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த திடீர் வெள்ளத்தால், மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசாங்க உதவி கிடைப்பதை உறுதி செய்ய அங்கு இரண்டு வார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Thu, 03/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை