நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் ஏப்ரல் 09 வரை நீடிப்பு

நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் ஏப்ரல் 09 வரை நீடிப்பு-Nalaka de Silva Re Remanded Till Apr 09

தீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வாவுக்கு எதிர்வரும் ஏப்ரல் 09 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று (26) கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் 25 ஆம் திகதி முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 03/26/2019 - 16:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை