DIG நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் பெப். 27 வரை நீடிப்பு

Rizwan Segu Mohideen
DIG நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் பெப். 27 வரை நீடிப்பு-Nalaka De Silva Remanded Till Feb 27

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைதாகியுள்ள தீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று (30) கொழும்பு கோட்டை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவருக்கு எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இவ்வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான இந்திய நாட்டவருக்கும் எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 02/13/2019 - 19:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை