கண்ணதாசன் திருச்சி செல்வதற்காக ஒரு சமயம் சென்னை மீனப்பாக்கம் நிலையத்தில் காத்திருந்தார். விமானம் புறப்பட 15நிமிடம் முன்னதாக அங்கு வந்த இயக்குனர் ஸ்ரீதர் அவசரமாக ‘நாளை நெஞ்சில் ஓர் ஆலயம்’ படப்பிடிப்பு ஆரம்பம். உங்க பாடலைத்தான் ரிக்கார்டிங் பண்ணனும் எழுதித் தாருங்கள்’ என்றதும் கவிஞர் மூன்றே நிமிடத்தில்,
‘முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ
கடவுள் தந்த பொருளல்லவோ’
என்ற பாடலை எழுதிக் கொடுத்தார்.
-ஸ்ரீதர் வானொலி பேட்டியில் கூறியது.
Wed, 02/06/2019 - 13:47
from tkn