தென் ஆபிரிக்க மண்ணில் சாதனை படைத்த இலங்கை அணிக்கு வரவேற்பு

கட்டார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான கிவ்.ஆர்.-656 விமானத்தின் மூலம் இலங்கை அணி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்றுக் காலை 8 மணிக்கு வந்தடைந்தது என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை அணியை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விமான நிலைய வளாகத்திற்கு விஜயம் செய்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த 8 வீரர்கள் நேற்றைய தினம் வந்தடைந்தனர். இவ்வாறு வருகைத் தந்த இலங்கை அணி வீரர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

தென் ஆபிரிக்க மண்ணில் ஆசிய அணியொன்று முதல் தடவையாக டெஸ்ட் வெற்றியை தன்வசப்படுத்திய பெருமையை இலங்கை அணி தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tue, 02/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை