தினகரன் நிருபர் கே.ஏ.அலீம் காலமானார்

கம்பளை தினகரன் நிருபர் கே.ஏ.அலீம் தனது 66 ஆவது வயதில் நேற்று (13) காலமானார்

முன்னாள் உதவி கல்வி அதிகாரியான இவரின் ஜனாஸா நேற்று காலை 9.30 மணியளவில் கண்டி, இனிகல புதிய மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மருதமுனையை பிறப்பிடமாகவும் கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், அண்மையில் தமது மனைவியை இழந்த நிலையில் தமது நான்கு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந் நிலையிலேயே இவர் நேற்று காலமானார். பட்டதாரியான இவர் கடந்த 35 வருடங்களுக் கும் மேலாக கண்டியில் உள்ள பிரபல பாடசாலைகளில் உயர்தர பாட ஆசிரியராகவும் மற்றும் ஆசிரிய ஆலோசகருமாக சேவை செய்துள்ளார்.

இவர் தமது பணியிலிருந்து இளைப்பாறும் போது வலய உதவிக்கல்விப்பணிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். தினபதி, சிந்தாமணி மற்றும் தினகரன் பத்திரிகையில் மிக நீண்ட காலமாக கம்பளை நிருபராக கடமை புரிந்த காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் அவசியமான அரசியல் சார்ந்த பல கட்டுரைகளை எழுதிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Thu, 02/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை